பாஜகவினரின் தொடர் மிரட்டலை காரணமாக குண்டூர் ஜின்னா கோபுரத்திற்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஜின்னா கோபுரத்தின் பெயரை மாற்றி அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பாஜகவினர் அண்மைக்காலமாக சர்ச்சையை எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதியன்று இந்துவா அமைப்பான இந்து வாஹினியைச் சேர்ந்த சிலர் ஜின்னா கோபுரத்தின் மீது ஏறி தேசியக் கொடியை ஏற்ற முயன்றனர். இதனால்அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குண்டூர் கிழக்கு தொகுதி எம்எல்ஏ முகமது முஸ்தஃபா ஏற்பாட்டில் ஜின்னா கோபுரத்துக்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது.
அருகிலேயே ஒரு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாளை தேசியக் கொடி ஏற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் குண்டூர் ஒய்எஸ்ஆர்சி எம்எல்ஏ, முஸ்தஃபா, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளியோர் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவ வேண்டுமே தவிர இதுபோன்ற மதக் கலவரங்களைத் தூண்டக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.